கூட்டு வங்கிக்கணக்கானது கணவன் ,மனைவி ஓய்வூதியத்தை பெறுவதற்கு அவசியமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர் ஒருவர் இறக்க நேரிட்டால் , அவரது ஓய்வூதியம் அவர் மனைவிக்கு கிடைக்கும். அதனை பெற கூட்டு வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும். ஆனால் சிலர் இந்த கூட்டு வங்கி கணக்கை வைத்திருப்பதில்லை.இதனால் அவரது மனைவிக்கு ஓய்வூதியம் கிடைப்பதில்லை.
அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது, அரசு ஊழியர்கள் கூட்டு வங்கி கணக்கை சிலநேரங்களில் தொடங்க முடியாமல் போய்விடுகிறது. இதனால் அரசு கூட்டு வங்கி கணக்கை கட்டாயமாக்க கூடாது என வலியுறுத்தினோம் . இதனை ஓய்வூதிய துறையானது ஏற்று கொண்டது. கூட்டு வங்கி கணக்கில் ஓய்வூதியம் பெறுபவர்களை தனியாக கணக்கை தொடங்க வலியுறுத்த கூடாது எனவும் அவர் கூறினார்.