மாணவியர்
கேரளாவின் காசர்கோடு அருகே கரிவல்லூர் என்ற இடத்தில் டியூசனில் படிக்க சென்றுள்ளனர் மாணவியர். அங்கிருந்து வரும்போது அருகேயிருந்த ஒரு கடையில் ஷவர்மா என்ற அசைவ உணவினை சாப்பிட்டனர்.
உயிரிழப்பு
அதனை சாப்பிட்ட மாணவியர் அனைவரும் மயங்கி விழுந்தனர். பின் அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தேவானந்தா என்ற 16 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். மற்ற மாணவியர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பரிசோதனை
ஷவர்மா என்பது கோழி இறைச்சியில் தயாரிக்கப்படும் ஒருவகை உணவாகும். மாணவியர் சாப்பிட்ட ஷவர்மா பரிசோதனை மையத்துக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாணவியர் சாப்பிட ஷவர்மா கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.