வகுப்புகள்
கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் வழக்கம் போல் நடைபெறவில்லை. நடந்து முடிந்த கல்வி ஆண்டில் சில மாதங்கள் நேரடி வகுப்புகள் எதுவும் செயல்படவில்லை. ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றன.

நடவடிக்கை
நீண்ட இடைவெளிக்கு பின்னர் நேரடி வகுப்புகள் தொடங்கியதால் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு பொது தேர்வுகள் நடைபெற்றது.

பள்ளி கல்வித்துறை
1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அளிக்கப்படுவது நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் 9 ஆம் வகுப்பில் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த தகவல் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.