Friday, March 31, 2023
Home Blog

+2 மாணவி பள்ளி கழிவறையில் சடலமாக மீட்பு! உடலை வாங்கமறுத்த பெற்றோர்கள்!

0

மாணவி

தூத்துக்குடியில் இயங்கி வரும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவி படித்து வந்தார். இவர் அங்கு ஒரு விடுதியில் தங்கி 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

சடலம்

நேற்றையதினம் இரவு பள்ளி கழிவறையில் மாணவி தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். சடலத்தை பார்த்த சக மாணவிகள் பள்ளி நிர்வாகத்திற்கு உடனடியாக தகவலினை அளித்துள்ளனர். நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விசாரணை

போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மாணவி ஒருவாரத்திற்கு முன்பு சித்தி ஒருவர் இறந்த துக்க நிகழ்விற்காக ஊருக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. அங்கிருந்து வந்தபிறகு யாரிடமும் சரிவர பேசாமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

உடலை வாங்க மறுப்பு

மாணவியின் உடலை பெற்றோர்கள் வாங்க மறுத்துள்ளனர். மேலும் பெற்றோர்களும், உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மகளின் உயிரிழப்புக்கு ஆசிரியர்கள் தான் காரணம் என்றும், காவல்துறை கையெழுத்து கேட்டு கட்டாயப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழக முன்னாள் சட்டப்பேரவை தலைவர் சேடப்பட்டி முத்தையா காலமானார்!

0

குடும்பம்

நான்கு முறை சேடப்பட்டி சட்டமன்ற தொகுதியிலிருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதனால் சேடபட்டியார் என அழைக்கப்பட்டார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவி உள்ளார். இரண்டு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர்.

பதவி

இவர் 1991-1996 வரை அதிமுக காலத்தில் தமிழக சட்டப்பேரவை தலைவராக பதவியினை வகித்தவர். பெரியகுளம் மக்களவை உறுப்பினராக 2 முறை பதவி வகித்துள்ளார். 1999 இல் வாஜ்பாய் பிரதமராக இருந்தார். அந்த காலகட்டத்தில் மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். 2006 ஆம் ஆண்டு அதிமுக கட்சியில் இருந்து விலகி திமுக கட்சியில் ஈடுபட்டார். திமுகவில் இருந்த போது தேர்தல் பணி குழு தலைவராக கடந்த 16 ஆண்டு காலமாக பொறுப்பு வகித்தார்.

உடல்நலக்குறைவு

மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இவர் 3 மாதங்களாக தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் காலமானார் சேடப்பட்டி முத்தையா.

Actress Samantha: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமந்தா! என்ன ஆச்சு சமந்தாவுக்கு?

0

சமந்தா

இந்தியாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கடைசியாக கதீஜா என்ற கதாபாத்திரத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார். இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. இவர் இன்ஸ்டாகிராம் போன்ற இணையதள பக்கத்திலும் ஆக்டிவ் ஆக இருப்பார்.

படங்கள்

சமந்தா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சகுந்தலம், யசோதா ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பானது பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

மருத்துவமனை

நடிகை சமந்தா எதிர்பாராத நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் சமந்தாவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

காரணம்

நடிகை சமந்தா ஒரு விதமான தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமந்தா விரைவில் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

Petrol,diesel price: 123 ஆவது நாளாக மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்! பெட்ரோல், டீசல் விலை!

0

எண்ணெய் நிறுவனங்கள்

சர்வதேச சந்தை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் கவனித்து வருகிறது. அந்த நிலவரத்துக்கு ஏற்றவாறு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையினை நிர்ணயம் செய்து வருகின்றன.

திடீர் அறிவிப்பு

மே21 அன்று மத்திய அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பில் பெட்ரோல் மீதான கலால் வரிக்கு 9 ரூபாய், டீசல் மீதான கலால் வரிக்கு 7.50 ரூபாய் குறைப்பதாக வெளியிட்டது. இதன் மூலம் மே மாதம் 23 முதல் பெட்ரோல் விலை குறைவாக விற்பனை செய்யப்பட்டது.

கச்சா எண்ணெய்

இந்தியா 85% இறக்குமதியால் வரும் கச்சா எண்ணெயினை நம்பி உள்ளது. இந்த நிலையில் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ரஷ்யாவிலிருந்து அமெரிக்கா,ஐரோப்பிய நாடுகள் கச்சா எண்ணெய் வாங்க மறுத்துள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு மலிவு விலையில் கச்சா எண்ணெயினை விற்பனை செய்கிறது ரஷ்யா. இதனால் இந்தியாவிற்கு மலிவு விலையில் கச்சா எண்ணெய் கிடைக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை

123 ஆவது நாளாகிய இன்று விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Untouchability: கர்நாடகாவில் முடிவிற்கு வராமல் இருக்கும் தீண்டாமை! அங்கு என்ன நடந்தது தெரியுமா?

0

சாதி

பல ஆண்டுகளுக்கு முன்னர் பெரியார் முதல் பல சமூக சீர்திருத்தவாதிகள் சாதியினை ஒழிப்பதற்காக கடுமையாக போராடினர். இருபத்தொன்றாம் நூற்றாண்டாகிய தற்போது அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. தற்போதும் இந்த சாதி வேறுபாடு முடிவிற்கு வந்ததாக தெரியவில்லை. சில பழமையான கிராமங்களில் வசிக்கும் மக்கள் சாதியை அடையாளமாக பின்பற்றுகிறார்கள்.

கர்நாடக மாநிலம்

கோலார் மாவட்டம் மாலூர் தாலுகாவில் உள்ள கிராமத்தில் ரமேஷ், ஷோபா தபதியினர், அவர்களது மகன் வசித்து வருகிறார்கள். அங்கு ஊர் திருவிழா நடைபெற்றது. அங்கு அந்த குடும்பத்தினர் கலந்துள்ளனர். அந்த சிறுவன் சேத்தன் சாமியுடைய சிலைகளை தொட்டுள்ளான்.

சாதி வெறி

அந்த சிறுவன் சிலையினை தொடுவதை பார்த்த ஆதிக்க சாதியினர் அந்த குடும்பத்தினரை எச்சரித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அவர்களிடம் 60 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த கூறியுள்ளனர். அவர்கள் அந்த அபராதத்தை செலுத்தவில்லை என்றால் தலித்துகள் செலுத்த வேண்டும் என ஆதிக்க சாதியினர் கூறியுள்ளனர்.

புகார்

ஆதிக்க சாதியினரால் பாதிக்கப்பட்ட தம்பதியினர் எட்டு பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை குறித்து நடவடிக்கை எடுப்பதாக காவல்நிலையம் கூறியுள்ளது. இந்த சாதிவெறி சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tirupati Temple: மத வேறுபாட்டை முறியடித்த இஸ்லாமியர்கள்! திருப்பதி கோவிலில் அவர்கள் செய்தது என்ன?

0

திருப்பதி

இந்தியாவில் உள்ள மிகவும் முக்கியமான தலங்களில் திருப்பதி ஒன்றாகும். மிகவும் புகழ்பெற்ற இவ்வாலயம் திருப்பதி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஒரு வைணவ தலமாகும். இந்த ஹிந்து கோவிலில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். பலர் திருப்பதி கோவிலிற்காக நன்கொடைகள் வழங்கி வருகிறார்கள்.

கொடியேற்ற நிகழ்ச்சி

திருப்பதியில் வருகிற 27 ஆம் தேதி அன்று பிரமோற்சவ விழாவிற்கான கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த பெரிய விழாவானது 9 நாட்கள் அக்டோபர் 5 வரை நடைபெற உள்ளது. நேற்றைய தினம் “கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்” நடைபெற்றது.

இஸ்லாமிய தம்பதிகள்

கபினாபானு, அப்துல் கனி ஆகியோர் சென்னையை சேர்ந்த இஸ்லாமிய தம்பதிகள். இவர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்றுள்ளனர். இவர்கள் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் திருப்பதி கோவிலில் இவர்கள் செய்த செயல் வரவேற்பை பெற்றுள்ளது.

நன்கொடை

இஸ்லாமிய தம்பதிகள் ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னர் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரியை சந்தித்தனர். பின்னர் தலைமை அதிகாரி தர்மா ரெட்டி என்பவரிடம் ஒரு கோடிக்கான காசோலையை ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளனர். இவர்கள் கோவிலுக்கு நன்கொடை வழங்குவது முதல் முறை இல்லை, இதற்கு முன்னரும் நன்கொடைகளை வழங்கி வருகிறார்கள்.

பாராட்டு

நன்கொடை வழங்கி சென்ற அந்த தம்பதிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இவர்களை சமூக ஊடகங்களிலும் பலர் பாராட்டி வருகிறார்கள். மத வேறுபாட்டினை முறியடித்து அவர்கள் செய்த காரியம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

Diwali Ticket Booking: சொந்த ஊர் செல்பவர்களின் தீபாவளி பயணச்சீட்டு முன்பதிவு சற்றுமுன் தொடக்கம்!

0

தீபாவளி

வருடத்திற்கு ஒருமுறை கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. 2022 ஆம் வருடம் தீபாவளியானது அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி வருகிறது. இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும் சிறந்த பண்டிகையாக இது உள்ளது.

புறநகர் பகுதி

தொழில், வேலைவாய்ப்பு போன்றவற்றிற்காக புறநகர் பகுதிகளில் மக்கள் வசித்து வருகிறார்கள். இவ்வாறு வேலை பார்ப்பவர்கள் பண்டிகை தினங்களில் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த ஆண்டு வரும் தீபாவளியை கொண்டாடுவதற்காக மக்கள் அவர்களது பயணத்தை திட்டமிட்டு வருகின்றனர்.

முன்பதிவு

அரசு விரைவு பேருந்துகளில் அக்டோபர் 22 ஆம் தேதி பயணம் செய்ய இன்றைய தினம் புதன்கிழமை தீபாவளி முன்பதிவானது தொடங்கியுள்ளது. இதன் மூலம் மக்கள் 30 தினங்களுக்கு முன்னதாகவே முன்பதிவினை செய்யும் வசதி ஏற்பட்டுள்ளது. தீபாவளிக்கு 3 நாட்கள் முன்னதாக செல்ல நினைப்பவர்கள் இன்றைய தினம் முன்பதிவினை செய்து கொள்ளலாம்.

முன்பதிவு செய்யவேண்டிய இணையதளம்

தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு செல்ல விரும்பும் நபர்கள் www.tnstc.com என்ற இணையதளம் மூலமாக அவர்களது முன்பதிவினை செய்துகொள்ளலாம். பேருந்து நிலையங்களில் சென்று முன்பதிவு மையங்கள் மூலமாகவும் முன்பதிவினை செய்து கொள்ளலாம்.

சிறப்பு பேருந்துகள்

தீபாவளி விடுமுறையை முன்னிட்டு பயணிகள் சிரமங்களை தடுப்பதற்காக சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்குவது வழக்கம் ஆகும். இந்த ஆண்டும் பயணிகள் செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னை மாநகரில் வசிக்கும் மக்கள் ஊர்களுக்கு செல்ல 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

H1N1 influenza virus: புதியதாக பரவி வரும் H1N1 இன்ப்ளூயன்சா வைரஸ்! பருவகால மாற்றத்தால் ஏற்படுவதாக தகவல்!

0

இன்ப்ளூயன்சா வைரஸ்

H1N1 இன்ப்ளூயன்சா வைரஸ் என்பது ஒருவகை தொற்று நோயாகும். இது வைரசால் ஏற்படும் பன்றிக்காய்ச்சல் ஆகும். ஆரம்ப காலகட்டத்தில் இந்த தொற்று பன்றிகளிடையே காணப்பட்டது. இந்த தொற்று நோயானது தமிழகத்தில் தற்போது பரவி வருகிறது. ஏ வகை, பி வகை, சி வகை இன்ப்ளூயன்சா வைரஸ்கள் மக்களை பாதிப்படைய வைத்துள்ளது. இந்த வைரஸ் காற்று அல்லது இருமல் மூலமாக மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்துகிறது.

பருவகாலம்

தமிழகத்தில் பருவநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் மக்களுக்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகமாக பரவி வருகின்றன. பருவமழை காலங்களில் காய்ச்சல் அளவு அதிகரிக்கும் என்பதால் இதனை குறித்து அச்சப்படவேண்டாம் என சிலர் தெரிவித்துள்ளனர்.

பாதிப்பு

இதுவரை தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்ப்ளூயன்சா வைரஸ் என்ற பன்றிக்காய்ச்சலால் ஒருநாளைக்கு 300 க்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

முகாம்கள்

தொற்றுக்கள் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம்களை நடத்த உள்ளது. மருத்துவ முகாம்களை இன்றைய தினம் முதல் தமிழகத்தில் நடத்த உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த முகாம்கள் மூலம் தொற்றினை குறைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

காய்ச்சலின் சில அறிகுறிகள்

தலைவலி, தும்மல், மூக்கில் நீர்வடிதல், தொண்டைவலி,காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உடலில் ஏற்படும். தும்மல் ஏற்படும் போது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. இந்த பரிசோதனை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படுகிறது.

தடுக்கும் முறை

வீடுகளில் இருக்கும் போதும், வெளியே செல்லும் போதும் கை, கால்களை நன்றாக கழுவ வேண்டும். கைகளை சுத்தம் செய்த பின்னர் மட்டுமே பொருள்களை தொட வேண்டும். தும்மல் வரும்போது சிறு துணியால் வாய், மூக்கை மூட வேண்டும். இன்ப்ளூயன்சா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும்.

Indian Bonds: ஜேபி மோர்கன் குறியீட்டில் சேர்க்கப்படும் கோல்ட்மேன் சாக்ஸ் இந்திய பத்திரங்கள்!

0

வரவுகள்

உலகளாவிய குறியீட்டில் இந்திய அரசு பத்திரங்கள் சேர்க்கப்படும் போது, நாட்டின் நடப்பு கணக்கு, நிதி பற்றாக்குறை போன்றவற்றிற்கு நிதியளிக்க உதவும் சுமார் $30 பில்லியன் செயலற்ற வரவுகளை தூண்டுவதாக கோல்ட்மேன் சாக்ஸ் குரூப் மூலம் குறிப்பிடப்படுகிறது.

இந்திய பத்திரம்

ஒரு குறிப்பில், ஜேபி மோர்கனின் ஜிபிஐ-இஎம் குளோபல் டைவர்சிஃபைட் பாண்ட் இன்டெக்ஸ் இல் நாட்டின் இறையாண்மை பத்திரங்கள் ஆரம்ப 10% வெயிட்டேஜுடன் சேர்க்கப்படலாம் என ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர். உலகளாவிய குறியீட்டின் எந்தஒரு பகுதியிலும் இல்லாமல் மிகப்பெரிதாக வளர்ந்துவரும் சந்தைகளில் இறையாண்மை பத்திரச் சந்தையும் ஒன்றாகும்.

சர்வதேச தளம்

யூரோக்ளியர் போன்ற சர்வதேச தளங்களில் இந்திய பத்திரங்களை தீர்வு காண உதவும் வெளிநாட்டினருக்கான வரி மாற்றங்களை செய்வதிலிருந்து புது தில்லி விலகியது. இதனால் குறியீட்டு சேர்க்கை பின்னுக்கு சென்றாலும் கோல்ட்மேனின் மீது நம்பிக்கை வந்துள்ளது.

ஆய்வாளர்கள்

ஜேபி மோர்கன் குறியீட்டில் சீனா, இந்தோனேசிய அரசாங்க பத்திரங்கள் ஒரு பகுதியாக உள்ளது என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தியாவை இதில் சேர்ப்பதால் ஒட்டுமொத்த குறியீட்டின் விளைச்சலை அதிகமாக்கவும், பல வகைகளாக வகைப்படுத்தவும் உதவுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். இதன் மூலம் இஎம் முதலீட்டாளர்கள் மட்டுமின்றி இந்திய அரசாங்கம் உட்பட பல பங்குதாரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

முன்னேற்றம்

வெளிநாட்டில் இருப்பவர்களின் கணக்கு திறப்புகள் இந்தியாவில் தற்போதும் சிரமமாகவே உள்ளது. இதனை நீண்ட கால அவகாசம் மூலம் சமாளிக்க முடியும். மார்ஜின் தேவைகள், நீடிக்கப்பட்ட தீர்வு காணும் நேரங்கள் போன்றவற்றில் நாடு முன்னேற்றம் அடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ப்ளூம்பெர்க் எல்பி மற்ற வழங்குநர்களின் குறியீடுகளுடன் போட்டியிடும் குறியீடுகளை நிர்வகித்து வருகிறது.

P.V.Sindhu!: பாட்மின்டன் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய பி.வி.சிந்து!

0

நட்சத்திர வீரர்

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் ஓப்பன் பாட்மின்டன் போட்டியில் அரையிறுதி சுற்றில் வெற்றிபெற்று இறுதி சுற்றுக்கு தேர்வாகியுள்ளார் இந்தியாவின் நட்சத்திர வீரர் சிந்து.

தேர்வு

அரையிறுதியில் சிந்து, ஜப்பான் வீராங்கனை சேனா காவாகமியை 21-15, 21-7 என்ற கணக்கில் அபார வெற்றிப்பெற்று இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.