பொதுக்கூட்டம்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் தலைமைக்கழக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி கலந்துகொண்டு பேசினார்.

மாண்புமிகு மேயர்
செருப்பை தலையில் தூக்கி கொண்டு இருந்த சமுதாயத்தை மேயராக்கி வணக்கத்திற்குரிய மாண்புமிகு மேயர் அவர்களே என அழைக்க வைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் என தெரிவித்துள்ளார். பெண்களுக்கு ஓட்டுரிமை வாங்கி தந்தது கலைஞர் என்றும், பெண்களுக்கு சொத்துரிமை வாங்கி தந்தது கலைஞர் என்றும் கூறினார்.

ஆட்சி
பெண்களுக்கு அரசியலில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்தவர் ஸ்டாலின் என்றும், பாரதியார், பாரதிதாசன் வழியில் ஆட்சி நடத்தி வருபவர் ஸ்டாலின் என்றும் கூறியுள்ளார். இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், பெண்களுக்கு சம உரிமை என பல சாதனைகளை வழங்கி கொண்டிருப்பது திமுக ஆட்சி என்றும் லியோனி தெரிவித்தார்.