புகார்
சென்னை கிண்டியில் உள்ள 15வயது சிறுமி தந்து தந்தை தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளிப்பதாக புகார் அளித்து இருந்தார். அந்த தொண்டு நிறுவன உறுப்பினர் புகாரின் அடிப்படையில் சென்னை கிண்டி மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

கைது
பாதிக்கப்பட்ட சிறுமியின் 7 வயது முதல் 15 வயது வரை தந்தை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 2019 ஆம் ஆண்டு சிறுமி கர்ப்பமடைந்த போது தாயிடம் தெரிவித்துள்ளார். பின்னர் கருவை கலைத்து வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. சிறுமியின் தந்தை, தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணை
இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இருக்க கூடிய போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி காவல்துறையினர் தரப்பில் நிரூபிக்கப்பட்டது.

தீர்ப்பு
முதல் குற்றவாளியான தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். தாய் மாதவிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி, ரூபாய் 10,000 அபராதம் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பினை வழங்கினார்.