தொழில்
முதல்வர் ஸ்டாலின் அரசு பயணமாக துபாய், அபுதாபி சென்று வந்துள்ளார். முதல்வர் ஸ்டாலினுடன் குடும்பத்தினரும் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயணத்தினால் ஆறு நிறுவனங்கள் 6,100 ரூபாய் முதலீட்டில் தமிழகத்தில் தொழில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உளவுத்துறை
இதன் பின்னணியில் முதல்வரின் மருமகன் சபரீசன் முக்கிய பங்கினை வகித்துள்ளார். இதனை அறிந்த உளவுத்துறை மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதனால் முதல்வரின் பயணம் முழுவதையும் மத்திய உளவுத்துறையினர், அமலாக்க துறையினர் கண்காணித்துள்ளனர்.

விசாரணை
மத்திய உளவுத்துறை அலுவலர்கள் துபாயில் நடந்த அனைத்து விவரங்களையும் சேகரித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர். பண பரிமாற்ற விஷயங்கள் நடந்ததா என்பதனை குறித்து விசாரணை நடத்தி உள்ளது.

பாஜக தலைவர் அண்ணாமலை
அமலாக்க துறை அறிக்கை அளித்தால் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கலாம் என்கிறது டில்லி வட்டாரம். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அவருக்குரிய வழிகளில் முதல்வர் பயணம் தொடர்பாக சில தகவல்களை திரட்டியுள்ளார்கள். கவர்னர் ரவியிடம் அவற்றை வழங்க அவர் திட்டமிட்டுள்ளார்.