உப்பிலியபுரம் கிராமம் காட்டுக் கொட்டகையை சேர்ந்தவர்கள் பழனியம்மாள் தம்பதி. இவர்களது மகன்கள் ஆறுமுகம் மற்றும் முருகேசன் . சிக்ககவுண்டர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். ஆறுமுகம் கல்லூரி பேருந்து ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். முருகேசன் என்பவர் மாற்றுத்திறனாளி ஆவார்.
குடும்ப சொத்துக்கள்
இதனால் குடும்ப சொத்துக்கள் பிரிக்கப்பட்டு ஆறுமுகம் மற்றும் முருகேச னுக்கு முறையாக எழுதிக்கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆறுமுகம் தாயிடம் அடிக்கடி சண்டை போடுவதாக கூறப்படுகிறது.
சொத்து தகராறு
இதனிடையே நேற்று மாலை நடந்த சொத்து சண்டையில் ஆறுமுகம் தன் தாயை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முருகேசனின் மகன் மருதுபாண்டி, அரிவாளை எடுத்து ஆறுமுகத்தின் கழுத்தில் வெட்டியுளளார். இதில் கழுத்து துண்டாகி சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் உயிர் இழந்தார்.
இன்ஸ்பெக்டர் செந்தில் குமார்
இந்த சம்பவத்தை தொடர்ந்து எஸ்பி சுஜித்குமார் நேரில் சென்று பார்வையிட்டார். போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் வழக்குப் பதிவு செய்து மருது பாண்டியை தேடி வருகின்றனர்.
கொலை
இதனால் இந்த கொலை சம்பந்தமாக மணிகண்டன் மற்றும் கண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். சொத்து தகராறில் பெரியப்பாவை தம்பி மகன் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளன.