ஆம்பூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கோதண்டன். இவரது மனைவி சிந்து வயது 48. இவர்கள் இரண்டு பேரும் நேற்று முன்தினம் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தனர்.
இரவு
நள்ளிரவில் பீரோ திறக்கும் சத்தம் கேட்டு கோதண்டன் கண் விழித்துள்ளார். பீரோ இருக்கும் அறையில் ஒருவர் பணம், நகை திருடுவதை கோதண்டன் கண்டுள்ளார். அவர் வெளிப்பக்கமாக கதவை பூட்டிவிட்டு கூச்சலிட்டுள்ளார்.

காவல் நிலையம்
கூச்சலிட்டதை கேட்டு திரண்ட பொதுமக்கள் வீட்டில் திருடமுயன்ற நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணை
காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் வினோத் என்பதும், இவர் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. வினோத்தை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.