நடிகைகள் கொஞ்சம் படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மனதில் இடம் பிடித்து விடுவார்கள். அந்த வகையில் தமிழில் குறைவாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சரண்யா மோகன்.
அரவிந்த் கிருஷ்ணா
யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவின் தங்கையாகவும், வேலாயுதம் படத்தில் விஜய்யின் தங்கையாகவும் நடித்து பிரபலமானவர் சரண்யா. அரவிந்த் கிருஷ்ணா என்ற ஒருவரை திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் குடும்பம் என செட்டிலாகி விட்டர் . பின் படங்களில் நடிக்காமல் சினிமாவை விட்டு விலகியுள்ளார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சரண்யா திரை அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.
யாரடி நீ மோகினி
என்ன தான் குழந்தை நட்சத்திரமாக நான் அறிமுகமாகி இருந்தாலும் நான் சினிமாவை விட்டு படிப்பில் கவனம் செலுத்தி வந்தேன். பின்னர் நான் பதினோறாம் வகுப்பு படிக்கும்போது கனவு என்ற படத்தில் நடிக்க கேட்டார்கள். என் குருநாதர் கேட்டு கொண்டதால் அதை மறுக்க முடியவில்லை. யாரடி நீ மோகினி படத்தின் புரொடெக்ஷன் டீம் நடிக்க கேட்டார்கள்.
குழந்தைகள்
அந்த படத்தில் நயன்தாராவுக்கு தங்கச்சி ரோலில் நடிக்க உறுதி செய்து விட்டார்கள். அன்பு கட்டளையால் வேறு வழியில்லாமல் படத்தில் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் நான் திருமணம் குழந்தைகள் என்று செட்டிலாகி விட்டதால் நடிப்பில் கவனம் செலுத்தவில்லை. குழந்தைகள் வளர்ந்து விட்டதால் சினிமாவில் நடிக்கலாம் என்று இருக்கிறேன்.