விற்பனை
கடந்த சில மாதங்களாக மாருதி சுஸுகி நிறுவனம் தொடர்ச்சியாக பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றது. புதிய தலைமுறை செலிரியோ, செலிரியோ சிஎன்ஜி 2022 பலேனோ என மாருதி சுஸுகி நிறுவனத்திடம் இருந்து தொடர்ந்து கார்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

அறிமுகம்
2022 ம் ஆண்டில் இன்னும் பல்வேறு புதிய கார்களை நிறுவனம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டின் மத்தியில் புதிய தலைமுறை விட்டாரா ப்ரெஸ்ஸா காரை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

சோதனை
மேம்படுத்தப்பட்ட 2022 எர்டிகா, 2022 எக்ஸ்எல்6 கார்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இந்த இரண்டு கார்களும் வரும் ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளன. இந்த இரண்டு கார்களும் ஏற்கனவே இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

கியர் பாக்ஸ்
2022 மாருதி சுஸுகி எர்டிகா காரில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த புதிய காரில் புதிய கிரில் அமைப்பை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மாற்றங்கள்
பெரிய 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் புதிய வசதிகள் மூலம் காரை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஞ்சின்
எர்டிகாவை போன்று 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டு வருகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 105 பிஎஸ் பவரையும் 138 என்எம் டார்க்கையும் உருவாக்கும். இந்த எஞ்சின் புதிய மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.