விமானம்
கடந்த 2016ம் ஆண்டு பாரிஸில்- கெய்ரோ நோக்கி சென்ற எகிப்து விமானம் விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் மொத்தம் 66 நபர்கள் உயிரிழந்தனர். கிரீஸ் அருகே கடலில் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டது. தீவிரவாத தாக்குதலால் இந்த விபத்து ஏற்பட்டதாக எகிப்து அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அறிக்கை
எகிப்து விமானத்தின் விமானி சிகரெட் பிடித்ததால் அப்போது விபத்து ஏற்பட்டுள்ளது. விமானிகளுக்கான அறையில் இருந்த விமானி ஒருவர் சிகரெட் பற்றவைக்க லைட்டரை பற்ற வைத்துள்ளார். அப்போது விமானத்தில் இருந்த அவசர முகக் கவசத்தில் இருந்து ஆக்சிஜன் கசிந்து தீப் பொறியானது. இந்த தீப்பொறியானது விமானத்தின் அறையில் பரவியது.

விபத்து
தீப்பொறியானது விமானத்திலும் பரவியதால் பெரியளவில் விபத்து ஏற்பட்டது. இந்த விமானம் மத்தியதரை கடலில் விழுந்துள்ளது. அந்த விமானத்தில் இருந்த 66 நபர்களும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 40 எகிப்தியர்களும், 15 பிரான்ஸ் குடிமக்களும் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.