மகிழ்ச்சியால் நிரம்பும் இந்தியா! தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்கள்!
ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் தேவையும், அதன் விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
பல நாடுகளுக்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
ரஷ்யா கச்சா எண்ணெய்க்கு சுமார் 35 டாலர் தள்ளுபடி விலையில் அளிப்பதாக அறிவித்துள்ளது.
இந்தியாவிற்கு சுமார் 15 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
ரஷ்யா இந்தியாவிற்கு பிரென்ட் கச்சா எண்ணெய் விலையை வைத்து தள்ளுபடி அளிப்பதாக தெரிவித்துள்ளது.
இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்க்கு ரூபாய் வாயிலாகவும் பேமெண்ட் செலுத்த அனுமதி அளித்துள்ளது.
அதிகப்படியான ரஷ்யா எண்ணெய் தள்ளுபடியில் இந்தியாவுக்கு வரும்.
இதனால் பெட்ரோல், டீசல் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்புகள் உள்ளது.