அடுத்த மாதம் அறிமுகமாகவுள்ள மாருதி சுஸுகி எர்டிகா, மாருதி சுஸுகி எக்ஸ்எல்6!
மாருதி சுஸுகி நிறுவனம் பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றது.
செலிரியோ, செலிரியோ சிஎன்ஜி 2022 பலேனோ என தொடர்ந்து கார்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
2022 ம் ஆண்டில் புதிய கார்களை நிறுவனம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேம்படுத்தப்பட்ட 2022 எர்டிகா, 2022 எக்ஸ்எல்6 கார்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.
இந்த இரண்டு கார்களும் ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளன.
இரண்டு கார்களும் ஏற்கனவே இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
எர்டிகா காரில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வு வழங்கப்பட உள்ளது.
இந்த புதிய காரில் புதிய கிரில் அமைப்பை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
பெரிய 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது.
1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டு வருகிறது
இந்த எஞ்சின் புதிய மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.