சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மரணம்! 35 ஆண்டுகள் சிறையில் இருந்த மீசை மாதையன்!
தமிழகம், கர்நாடகா, கேரளா மாநிலத்தின் போலீசாருக்கு 25 ஆண்டுகளாக கண்ணாமூச்சி காட்டி வந்தவர் வீரப்பன்.
மாதையன் கடந்த 35 ஆண்டுகளாக சிறையில் உள்ளார்
மாதையன் கடந்த 15 நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் பரோலில் சென்று திரும்பினார்.
மீண்டும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் மாதையன் அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.