சினிமா
தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தெலுங்கு திரையுலகிலும் நடிக்க உள்ளார்.

ஊர்
தமிழில் ஒரு பாடகராக, நடிகராக, தயாரிப்பாளராக பாடலாசிரியராக விளங்கும் சிவகார்த்திகேயனின் குடும்ப தகவல்கள் சில தற்போது கிடைத்துள்ளது. திருவிலிமிழலை என்பது தான் சிவகார்த்திகேயனின் பூர்விக ஊர் ஆகும்.

கலைஞர்கள்
மிகப்பெரும் நாதஸ்வர கலைஞர்களான சுப்பிரமணியம் பிள்ளை, மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஆகியோரின் கொள்ளுப்பேரன் தான் சிவகார்த்திகேயன். திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் நெருங்கிய உறவினர் ஆக உள்ளவர்கள் கலைஞர் குடும்பத்தினர். இதன் அடிப்படையில் சிவகார்த்திகேயன், கலைஞர் குடுபத்தினர் நாதஸ்வர கலைஞர்களின் வழியாக வந்தவர்கள்.

உறவு
இதனை வைத்து பார்க்கும் போது முதல்வர் குடும்பத்தினருக்கும், சிவகார்த்திகேயன் குடும்பத்தினருக்கும் நெருங்கிய உறவு இருப்பதாக தெரிகிறது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் அவரின் சொந்த ஊருக்கு சென்ற போது சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

தகவல்
அவர் அங்கு இருந்த ரசிகர்களிடமும் சிறப்பாக கலந்துரையாடிய போது பலருக்கும் சிவகார்த்திகேயன் நாதஸ்வர கலைஞர் வழி வந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவருடைய முன்னோர்களை பற்றிய தகவலும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.